Sunday 29 August, 2010



அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக பார்க்கும் இணையதளமாக
இன்று onlinepj.com உள்ளது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஒரு நாளைக்கு கிட்டதட்ட
50,000 பேர் பார்வையிடுகின்றனர்.
காலை 10.00 மணிக்கு இன்றைய வருகையாளர் எண்ணிக்கை உங்களுக்கு அட்டாச் செய்யப்பட்டுள்ளது.
நாளைக்கு சோதனை செய்யலாம் . ( இன்ஷாஅல்லாஹ் )
Read more » 0 comments

Sunday 22 August, 2010

இன்டர்நெட் அபாயம்



இன்டர்நெட் அபாயம்


பன்னெடுங் காலமாக உலக மக்கள் அனைவரும் தங்களின் தகவல்களை கடிதம் மூலம் பரிமாறிக் கொண்டனர். கடிதத்தின் மூலம் தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து, சுக துக்கங்கள், நலம் விசாரிப்பது போன்ற செய்திகளை பறிமாறிக் கொண்டனர். பின்னர் கணினி கண்டு பிடிக்கப்பட்டதும் இந்நிலை மாறியது.

கணினி கண்டு பிடித்த பிறகு நவீன யுகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் இன்டர்நெட், இமெயில் போன்ற வளர்ச்சியும் ஏற்பட்டது. இமெயில் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதுடன் அலுவலகப் பணிகளுக்கும் இது பெரிதும் உதவியது.

அதன் பின்னர் யாஹு, கூகுள், ஸ்கைப் போன்ற சாட்டிங் புரோகிராம்களும் தலையெடுக்க ஆரம்பித்தன. முதன் முதல் யாஹு சாட்டிங்க வந்தவுடன் மக்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. இந்த யாஹு சாட்டிங்கில் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

வெளிநாட்டில் வசிக்கும் தங்களின் உறவினர்களிடம் கான்பரன்சிங் மூலம் அதாவது வெப் கேமரா மூலம் முகத்தை முகம் பார்த்து பேசும் வசதியால் இதை பயன்படுத்துவோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

தொலைபேசியில் பேசி காசை கரியாக்குவதை விட பலமணி நேரம் முகத்தை முகம் பார்த்து பேசினாலும் இந்த சாட்டிங் மூலம் குறைந்த அளவே பணம் செலவானது. இதனால் மக்களிடையே இந்த சாட்டிங் புரோகிராம்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

ஆனால் சில சமூக விரோதிகள் தங்களை யார் என்றும், தங்களின் ஊர், முகவரி எது என்றும் உண்மையான தகவல்களைச் சொல்லாமல் பொய்யான தகவல்களைப் பறிமாறிக் கொண்டனர். (எதற்காக என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களே தங்களிடம் பழகும்போது தவறாக நடந்து கொள்வார்களோ என்ற அச்சத்தில் இருக்கும்போது, இந்த சாட்டிங் மூலம் ஊர் பேர், முகம் தெரியாத யாரே ஒருவரிடம் தங்களின் உண்மையான முகவரியைத் தந்தால் அதன் மூலம் பிரச்சினை ஏற்படும் என்று பயந்ததால் உண்மையான முகவரியைக் கூறபயந்தனர்.) இதைப் பற்றி கவலைப் படாத ஒருசிலர் மட்டுமே தங்களின் உண்மையான முகவரியை கூறினர்.

இந்த சாட்டிங்கில் போய் பார்த்தால்தான் தெரியும். அவ்வளவும் அசிங்கம். கெட்ட கெட்ட வார்த்தைகளையும், தகாத வார்த்தைகளையும் உபயோகித்து பப்ளிக் சாட்டிங் எனப்படும் இடத்தில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டு இதை ஒரு பொழுதுபோக்காகவே சிலர் செய்து வருகின்றனர்.

நவீன யுகம் வளர வளர பாதுகாப்பு என்பதற்கே பங்கம் வரும் வகையில் பல புதிய புதிய பிரச்சினைகள் இதன் மூலம் வளருகின்றன.

அப்படி இருந்தும் முகம், ஊர் பேர் தெரியாத, அறிமுகம் அல்லாத சிலரும் (ஆண்கள்) தங்களை பெண்கள் என்றும் 18 வயதுதான் ஆகிறது என்றும் ஆண்களையும், பெண்களையும் ஏமாற்றி ஒரு பொழுது போக்குக்காக இப்படி செய்து வந்தனர். இதன் மூலம் பல இன்னல்களை அப்பாவி ஆண்களும், பெண்களும் அனுபவித்தனர்.

அறிமுகமில்லாத நபர்களுடனும், புதிதாக ஏற்படுத்திக் கொள்ளும் நண்பர்களுடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்தும் கூட பின்னர் அதை மறந்து இப்படி பல இன்னல்களில் மாட்டிக் கொண்டு வேதனைப்படுகின்றனர்.

சமீப காலமாக சாட்டிங் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நண்பர்களாகவும், உறவினர்களாகவும், கணவன் மனைவிகளாகவும் தங்களின் உறவுகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்...

சமீபத்தில் ஒரு வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நடந்தது. அது என்னவென்றால் திருச்சியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் நகைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் ஒருவரைக் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மனமுடைந்த அந்தப் பெண்ணின் தந்தை இந்தக் காதலுக்கு இளைய மகள் சூர்யாவும் உடந்தை என்று எண்ணியதால் இனிமேல் காதல் கல்யாணம் என்று நீ கூறினாலும் அதற்கு அனுமதியில்லை என்று இளைய மகளிடம் கூறி விட்டார்.

நாளடைவில் இந்த சம்பவத்தை தனது தந்தை மறந்திருப்பார் என்று இளைய மகளும் ஒருவரைக் காதலித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை உங்களுடைய சங்காத்தமே வேண்டாம்; ஆளை விடுங்க என்று தனியாக போய் விட்டார்.

தாயுடன் தனியாக வசித்து வந்த சூர்யா தனது காதலை வளர்த்து வந்தார். இதற்கு அவரின் அம்மாவும் உடந்தையாக இருந்தார். அந்தக் காதலன் வேறு யாருமில்லை. இன்டர்நெட் சாட்டிங் மூலமாக வந்த காதலன்தான் அவன்.

சாட்டிங்கில் அறிமுகமான நபர் முதலில் யார் என்றே தெரியாமல் இருந்த சூர்யாவுக்கு பின்னர் அவரின் காதல் தனது மனதை மாற்றியது. இதனால் இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்ந்தது. இப்படி இவர்களின் காதல் கதை போய்க் கொண்டிருக்கும்போது ஒருநாள் காதலன் சாட்டிங்கில் வருவதையே நிறுத்திக் கொண்டான்.

இவளும் பலமுறை முயற்சி செய்தும் ஒருமுறை சாட்டிங்கில் வந்த காதலன், நமது காதலை எனது பெற்றோர் ஏற்கவில்லை. எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். அதனால் என்னை மறந்து விடு என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

இதனால் மனமுடைந்த சூர்யா கத்தியால் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டது மட்டுமில்லாமல் தனது அம்மாவிடமும் இதைப் பற்றிக் கூறியதும் அவரும் தனது கை நரம்புகளை வெட்டிக் கொண்டார்.

ரத்தம் வழிந்தோடிய பிறகும் இறக்காததால் வீட்டில் உள்ள கேஸ் இணைப்பை கழற்றி விட்டு சமையல் அறை முழுவதும் கேஸை கசிய விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தீக்குச்சியை பற்றவைக்கக் கூட அவரிடம் தெம்பு இல்லை.

அப்பொழுது அவர் இருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவர் காலிங் பெல்லை அழுத்த ஸ்சுட்சில் இருந்து பொறி பறக்கவே வீடு முழுவதும் பரவியிருந்த கேஸ் உடனே பற்றிக் கொண்டது. பெருத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அருகில் உள்ளவர்கள் வந்து தீயை அணைத்தனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். கருகிய நிலையில் தாய், மகளையும் மீட்டனர்.

இப்பொழுது இருவருமே மருத்துவமனையில் சீரியஸாக உள்ளனர்.

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அறிமுகமில்லாதவர்களிடம், புதிதாக நண்பர்களாக ஆகுபவர்களிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்ற முயற்சியைக் கை விட வேண்டும்.

பிறப்பது ஒருமுறைதான் என்றாலும் பிறப்பின் மகத்துவத்தை அறிந்து கொண்டு இதுபோன்ற தவறான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்தாலே இதுபோன்ற இன்னல்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

Read more » 0 comments

Tuesday 17 August, 2010

நாணயங்கள்









நாணயங்களைக் காணவில்லை
பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும்' என்பது முதுமொழி. இன்றைய உலகில் பணம் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக ஆகிப்போய் உள்ளது.

பணம் இல்லாதவன் பிணம்', பணம் பத்தும் செய்யும்' என்பதுபோல இன்றைய யுகம் ஆகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பண்டைய காலத்தில் மனிதன் வணிகம் செய்யும்போது ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை பெற்றுள் கொள்வதே வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் பணம் என்ற ஒன்றை அவர்கள் கண்டறியவில்லை. இதனால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்தித்து வந்தனர். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வராதா என அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

அரிய வகை நாணயங்கள்

இதற்கு ஒரு வடிகாலாக மனிதன் நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கினான். நாணயங்கள் பயன்படுத்துவதின் மூலம் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருள் வாங்குவதின் மூலம் ஏற்படும் சிரமம் வெகுவாகக் குறைந்தது. ஆதி காலத்தில் மனிதர்கள் நாணயங்களை தங்கத்தாலும், செம்புகளாலும், வெள்ளியாலும் தயாரித்து பயன்படுத்தி வந்தனர். நவீன யுகத்தில் அதை மாற்றி ரூபாய் நோட்டுகளாக காகிதத்தில் பயன்படுத்தத் தொடங்கினர். நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் ரூபாய் நோட்டுகளையும், காசுகளையும் மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. நூறு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நாணயங்கள் மிகவும் கலைநயமிக்கதாகவும், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தது. அப்போதெல்லாம் நாணயங்கள் வெளியிடப்பட்டதும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும்.
புதிதாக வெளிவந்துள்ள 10 ரூபாய்

இந்தியாவில் நாணயங்கள் கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதில் Proof Coins மற்றும் Uncirculated Coins என்று இரு வகையான நாணயங்கள் உள்ளன. இந்த இரண்டு வகையான நாணயங்கள் பொழுதுபோக்குக்காக சேகரிப்பதற்கு மட்டுமே தவிர வர்த்தகத்துக்கு உபயோகப்படாது. 1964ல்தான் முதல் கமோமரேட்டிவ் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறப்பு நாணயங்கள் அச்சிடப்படும்போது அதைப் பற்றிய விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகும்.

நாணயத்தை வெளியிடும் பிரனாப் முகர்ஜி

இப்போது அந்நிலை மாறி விட்டது. புதிதாக நாணயம் வெளியிட்டு இரண்டு வருடங்கள் கழித்தும் சில நாணயங்கள் பெரும்பாலான மக்களிடம் கிடைப்பதில்லை. அந்த வகையில் சென்ற வருடம் 10 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்தும் மக்களின் பயன்பாட்டிற்கு அந்த நாணயம் வரவில்லை.

ரூபாய்க்கான குறியீட்டை கண்டுபிடித்த தமிழகத்தைச் சேர்ந்த உதய் குமார்


ஏனென்றால் அந்த நாணயம் கலைநயமிக்கதாகவும், செம்பு மற்றும் தாமிரத்தால் ஆனதாகவும் இந்ததால் சில கள்ளப் பேர்வழிகள் அதை பதுக்கத் தொடங்கினர். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் அந்த நாணயம் எப்படி உள்ளது என்பதைக் கூட பார்க்க முடியாமல் போனது. நாணயங்களைப் பதுக்குவது சட்டப்படி குற்றமாகும். இதற்கு இரண்டு வருடங்கள் கூட சிறைத் தண்டனை கூட கிடைக்கும். சிலர் நாணயங்களை சேகரிக்கிறோம் என்ற பெயரில் புதிதாக வெளியிடப்பட்ட நன்கு கலைநயமிக்க நாணயங்களை பதுக்கி வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களால் நாட்டில் அதிகப்படியான புதிதாக வெளியிடப்பட்ட நாணயங்கள் உலவி வருவது குறைந்து வருகிறது.

பல்வேறு வகையான ஐந்து ரூபாய் நாணயங்கள்

நாணயங்களை சேமித்து வைப்பதற்கென்றே காயின் செசைட்டி என்ற அமைப்பு உள்ளது. இதனை தொடர்பு கொண்டால் எப்போதெல்லாம் புதிதாக நாணயங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த அமைப்பு மூலம் நாணயங்களைப் பெற்று சேகரித்து வைத்துக் கொள்ளலாம். நாணயங்கள் சேகரிப்பது பொழுதுபோக்காகவும், பொது அறிவு வளர்ச்சிக்காவும் மட்டுமில்லாமல் சிறந்த முதலீடாகவும் சிலர் கருதுகின்றனர்.


ஏனென்றால் இந்த வகை அரிய நாணயங்கள் பிற்காலத்தில் ஏலத்தில் விடும்போது அந்த நாணயத்தின் மதிப்பை விட பன்மடங்கு விலை வைத்து அந்த வகை நாணயங்களை ஏலத்தில் விடுகின்றனர். இதன் மூலம் நல்ல வருவாயையும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. குறிப்பாக இப்போது வெளியாகி உள்ள ரூ. 10 நாணயம் பிற்காலத்தில் அதாவது 5 வருடங்கள் கழித்து ஏலத்தில் விடும்போது அதன் மதிப்பு ரூ. 5,000 என்றும் ரூ. 10,000ம் என்று ஆகி விடும். இதை கருத்தில் கொண்டுதான் நாணயம் சேகரிப்போர் சிலர் இந்த கலை நயமிக்க 10 ரூபாய் நாணயத்தை பதுக்கி வைத்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டை காலணா


(நீங்கள் நாணயத்தை சேமித்து வைக்கிறேன் என்று இதுபோன்ற செயல் இறங்கி விட மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அப்படி சேமித்து வைப்பதாக இருந்தால் ஒரே வகையான நாணயமாக சேமித்து வைக்காமல் வேவ்வோறு வகையான நாணயமாக சேமித்து வைக்கவும்).

எது எப்படியோ மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராத வகையில் நாணயம் சேகரிப்போர் சிறந்த முறையில் இவற்றைச் சேகரித்தால் (அதாவது ஒருவர் ஒரு நாணயத்தை சேகரிப்பது) மக்களின் பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கிடைத்து விடும். நான் கூட 10 ரூபாய் நாணயத்தை பார்த்ததே இல்லை. நெட்டில்தான் பார்த்திருக்கிறேன்.
Read more » 0 comments

Monday 16 August, 2010

திரை போடும் முறை


பெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போடுவது மார்க்கத்தில் உள்ளதா?


இன்றைய காலகட்டத்தில் நாம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை செய்கின்ற நேரங்களில் அதிகமான மக்களால் பரவலாக கேற்கப்படும் ஒரு கேள்விதான் பெண்களுக்கு பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் ஏன் நீங்கள் திரை போடுவதில்லை?

இந்தக் கேள்வியைக் பொருத்த மாத்திரத்தில் திரையைப் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

திரை என்றால் என்ன?

ஆண் பிரச்சாரகா்கள் பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் அல்லது பெண்களுக்கான குா்ஆன் வகுப்புகள் நடத்தும் போது பிரச்சாரகா்களுக்கும் கேட்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு மறைப்பை ஏற்படுத்துவார்கள் இது திரை என்ற வாசகத்தினால் குறிப்பிடப் படுகிறது.

இப்படி திரை போட்டு இரண்டு தரப்பாரையும் பிரித்து வைப்பது மார்க்கத்தில் உள்ளது தான் என மக்கள் எண்ணுகிறார்கள்.

பிரச்சாரத்திற்கு மட்டும் தான் திரையா?

பெண்கள் பயான் நிகழ்சிகள் அல்லது குா்ஆன் விளக்க வகுப்புகள் நடத்துகின்ற நேரத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்தத் திரை போடும் முறையை கையால்கிறார்கள்.இப்படி திரை போடும் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால் பெண்களை ஆண்கள் பார்த்துவிடக் கூடாது அதனால் தான் இப்படி நாங்கள் செய்கிறோம்.

அப்படி பார்க்கிற நேரங்களில் மார்க்கத்திற்கு முரனான காரியங்கள் நடப்பதற்கு வாய்பாக இருக்கிறது.என்று கூறிவிடுகிறார்கள்.

இப்படி மார்க்கப் பிரச்சாரத்திற்கு காரணம் சொல்லக் கூடியவர்கள் இதே காரணத்தை மற்ற இடங்களில் நடை முறைப்படுத்துவதில்லை.

கடைத்தெருவில் பெண்களுக்கு இந்தச் சட்டத்தை சொல்வதில்லை.

கல்லூரிகளில் படிக்கும் சகோதரிகளுக்கு இந்தச் சட்டத்தை சொல்வதில்லை.

பஸ்ஸில் பிரயாணிக்கும் பெண்களுக்கு இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த சொல்வதில்லை.

பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகள் விஷயத்தில் இந்த நடை முறையைக் கையால்வதில்லை.

பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கட்) களில் பொருள் வாங்கச் செல்லும் பெண்கள் விஷயத்தில் இந்தச் சட்டத்தை இவா்கள் பங்கு வைப்பதில்லை.

இப்படி எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எதற்கும் சொல்லாத இந்த சட்டத்தை மார்க்க விஷயத்தில் மாத்திரம் ஏன் கடைப்பிடிக்கிறார்கள்.

கடைத்தெருவில் திரை இல்லை. தவறு நடக்காதா?

கல்லூரிகளில் திரை இல்லை தவறு நடக்காதா?

பஸ்களில் திரை இல்லை தப்பு ஏற்படாதா?

பகுதி நேர வகுப்புகளில் குற்றம் நடக்காதா?

குற்றத்தைப் பொருத்தவரையில் இறையச்சம் இல்லாவிடில் எந்த இடத்திலும் தவறுகள் நடக்கலாம்.

அதற்காக மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை பேணுதல் என்ற அடிப்படையில் நாம் நடைமுறைப் படுத்தக் கூடாது.

நபியவா்கள் திரையைப் பயன் படுத்தினார்களா?

நபியவா்களின் காலத்தில் நபி(ஸல்)அவா்கள் பெண்களுக்கு மத்தியில் மார்கப் பிரச்சாரத்தை செய்திருக்கிறார்கள்.அப்படி பிரச்சாரம் செய்கின்ற நேரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பிரித்து திரை ஏதும் பயண்படுத்தவில்லை.

தற்காலத்தில் யார் அப்படி திரை போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்துகிறார்களோ அவர்கள் இதற்குறிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஹஜ்ஜுப் பெருநாள்' அல்லது 'நோன்புப் பெருநாள்' தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று ''பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகüல் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது'' என்று குறிப்பிட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?'' எனப் பெண்கள் கேட்டதும். ''நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள் மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்'' என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள் ''மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். ''பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அப்பெண்கள் ''ஆம் (பாதியளவுதான்)'' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''அதுதான் அவளது அறிவின் குறைபாடாகும்:'' என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா?'' என்று கேட்க மீண்டும் அப்பெண்கள் ''ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)'' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்'' என்று கூறினார்கள்.(புகாரி 304)

மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.ஆனால் அங்கு திரை போட்டு பேசவில்லை.

பொதுவாகவே பெண்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது இந்த நடை முறையைத் தான் நாம் கையால வேண்டும் பேணுதல் என்று கூறிக் கொண்டு நபியவர்கள் காட்டித் தராத காரியங்களை நாமாக மார்க்கம் என்று புகுத்துதல் கூடாது.

இதே நேரம் பள்ளியில் நுழையும் போது மற்றவர்களால் பெண்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்படும் என்று நாம் கருதும் பட்சத்தில் ஓரங்களில் திரைகளை போட்டுக் கொள்வதில் எந்தத் தவரும் இல்லை.

ஆனால் உரை நிகழ்த்தும் இமாமுக்கும் அதனை கேற்பவர்களுக்கும் மத்தியில் திரை போட வேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத ஒரு சட்டத்தை தினிப்பது குற்றமாகும்.
Read more » 0 comments

Tuesday 10 August, 2010

இஃதிகாப்

இஃதிகாப்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.

ரமலானில் இஃதிகாப் எதற்காக?

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இஃதிகாபின் ஆரம்பம்

இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.

அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இஃதிகாபின் முடிவு நேரம்

இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.

அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)

நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.

பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.

பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)

இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?” என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034)

நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?” என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.

மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041)

நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.

இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.

இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்

பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187)
தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது

ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029)
இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.

பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (309)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.

நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.

பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்குமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.

Read more » 0 comments

ஆயிஷா மைந்தன்