Monday 25 October, 2010

விவாதம் 1

கீழே விழுந்தேன் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை.
RASMIN M.I.Sc (India)

வெட்கமில்லாமல் மீண்டும் வெற்றிக் கோஷமா?

கடந்த 17.18.07.2010 ம் தேதி சென்னையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் மாபெரும் விவாதம் நடைபெற்றது. நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த விவாதத்தில் நடந்த நிகழ்ச்கிகளை நேற்றைய தினம் நமது இணையத்தளத்தில் தொகுத்து வழங்கியிருந்தோம்.

அல்லாஹ்வையே கிண்டலடித்துஇநபியின் வார்த்தைகளை நக்கல் செய்து கடைசி வரை ஒரு ஆதாரத்தைக் கூட வைக்க முடியாமல் கடைசியில் தலை கால் புரியாமல் உளரிக் கொட்டியதையும் நாம் தொகுத்து வழங்கியிருந்தோம்.

அத்துடன் மேற்கண்ட விவாதம் ஆகிய இரண்டு இணையத்தளங்களிலும் நேரடியாகவும் ஒளிபரப்பப் பட்டது.

களியக்காவிலையில் மூக்குடைபட்ட பின்பும் வெக்கம் கெட்டு எப்படி வெற்றி வெற்றி என்று கூச்சல் போட்டார்களோ அதே கூச்சல் மீண்டும் கேட்க ஆரம்பித்துள்ளது.

இந்த சுன்னத்தே இல்லாத ஜமாத்தைச் சோ்ந்த ஜமாலி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்கு இப்போது மறுப்பைத் தருகிறோம்.

உளரல் இலக்கம் 01.
சென்னையில் 17.07.2010 மற்றும் 18.07.2010 நடைபெற்ற விவாதத்தில் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனிலும்இ ஹதீஸிலும் சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் மற்றய இமாம்களுடைய கருத்துக்களிலும் நேரடியான ஆதாரம் உண்டா என்று மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பி ஜே அவர்களிடம் கேட்ட போது இறைவனுக்கு உருவம் உண்டு என இப்னு குதைபா கூறியுள்ளார் என்பதை பி ஜே அவர்கள் ஆதாரமாக காட்டினார்.

இதன் மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை. ஹதீஸில் ஆதாரம் இல்லை. சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் ஆதாரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.

அதாவது விவாதத்தில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் விவாதத்தை ஆண்லைன் மூலம் பார்த்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியும்.

விவாதம் ஆரம்பித்ததிலிருந்து தனது கருத்துக்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாமல் முழித்துக் கொண்டு உளரிக் கொட்டிய ஜமாலியிடம் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் திருமறைக் குர் ஆனிலிருந்தும் ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரத்தை அடுக்கடுக்காக எடுத்து வைத்துக் கொண்டே இருந்தார்.

இந்த கோமாலி எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் தனக்குக் கிடைத்த புனிதமான சந்தர்பங்களிலெல்லாம் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் கத்திக் கொண்டிருந்தார் (வீடியோவைப் பார்ப்பவர்கள் இதனை தெளிவாக அறிய முடியும்)

விவாதத்தின் இருதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று அறிஞர்கள் யாராவது கூறியுள்ளார்களா? என்று ஜமாலி தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு பதில் கொடுத்த பி.ஜெ அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படைக் கொள்கையை தெளிவு படுத்தினார்.

அதாவது எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் தவ்ஹீத் ஜெமாத்தைப் பொருத்தவரை அல்லாஹ் சொல்லியிருக்கிறானா? அல்லது அவனுடைய தூதர் சொல்லியிருக்கிறாரா என்றுதான் பார்ப்போமே தவிர அந்த ஸஹாபி சொன்னாரா இந்த இமாம் சொன்னாரா என்றெல்லாம் நாம் பார்ப்பதில்லை அப்படி பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

அதனால் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று எந்த இமாமோ அல்லது எந்த ஸஹாபியோ சொல்ல வேண்டும் என்று நாங்கள் பார்க்க மாட்டோம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் எங்களுக்குப் போதும்.

நீங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதால் இதோ இப்னு குதைபாவின் கருத்தைப் பாருங்கள் என்று அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக இப்னு குதைபா அவர்கள் சொன்ன தகவலை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டினார்.

உளரல் இலக்கம் 02

மேலும் நாங்கள் இப்னு குதைபாவை பின்பற்றக்கூடியவர்கள் என்று வாக்குமூலமும் அளித்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.

அத்துடன் நாங்கள் இப்னு குதைபாவைப் பின்பற்றக் கூடியவர்கள் என்று பி.ஜெ அவர்களே வாக்குமூலம் கொடுத்ததாகவும் இந்த அரைகுறை (ஜமாலி) எழுதியுள்ளது.

மேற்கண்ட வீடியோவில் அப்படி ஏதும் உள்ளதா பி.ஜெ அப்படி சொல்கிறாரா? வாசகர்களே இதற்கு பதில் சொல்லுங்கள்.

உளரல் இலக்கம் 03.

17.07.2010 சனி அன்று நடந்த விவாதத்தில் மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் எடுத்து வைத்த கருத்துக்களும் வாதங்களும் வஹ்ஹாபிகளுக்கு மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்செய்தி சென்னை முழுவதும் பரவியதால் விவாதத்தின் முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையில் வருகைதந்த வஹ்ஹாபிகள் மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஆ.யு அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாதத்தின் இரண்டாம் நாளான 18.07.2010 ஞாயறு அன்று அதிக எண்ணிக்கையில் வந்தனர்.
உண்மையில் இவர் பெயர் ஜமாலி அல்ல கோமாலி தான்.

ஏன் எனில் இவரின் இந்த வாதத்தைக் பாருங்கள். இந்த கோமாலி கூறிய கருத்துக்கள் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியதாம்…………….
அதனால் விவாதத்தின் முதல் நாள் வந்த கூட்டத்தை விட அதிகமாக தவ்ஹீத் சகோதரர்கள் அரங்கத்திற்கு வருகை தந்தார்களாம்.

ஞாயிற்றுக் கிழமை நடந்த விவாதத்தை ஆன்லைனில் பார்த்தவர்கள் உண்மையைப் புரிந்திருப்பார்கள்.

சகோதரர் பி.ஜெ அவர்கள் பேசும் போதே உங்கள் வாதத்தின் லெச்சனம் தான் நெற்று உங்கள் தரப்பில் வந்த கூட்டத்தில் பாதிப்பேரை இன்று காணம்.என்று செருப்பால் அடித்ததைப் போல் உண்மை நிலையைப் போட்டு உடைத்தார்.

அதற்கு பதில் கூறிய அறிஞர்(?) கோமாலி சாஹிப் அவர்கள். தமது தரப்பு ஏன் வரவில்லை என்பதை மறந்து விட்டு எனது வாதத்திறமையைப் பார்பதற்க்காகத்தான் உங்கள் தரப்பில் மக்கள் கூட்டம் குறையாமல் வந்திருக்கிறது.என்று ஜொல்லு வடியக் கூறினார் அதைக் கேட்ட அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. (ஜமாலின்ணே என்னென்னே கேவலத்திற்கு அளவு வேனாமா?)

அடுத்துப் பேசிய பி.ஜெ அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களிடம் நீங்கள் இவரின் வாதத்திரமையைப் பார்க்கத்தான் வந்தீர்களோ என்று கேட்க இல்லவே இல்லை என்று அரங்கம் அதிரும் அளவுக்கு சப்தம் கேட்டது.

அத்துடன் இவரின் கருத்துக்களைக் கேட்க சனிக்கிழமை வந்ததை விட அதிக எண்ணிக்கையில் தவ்ஹீத் சகோதரர்கள் வந்ததாக கூறுகிறாறே விவாதத்தின் ஒப்பந்தம் என்ன என்பதே இந்த கோ……… வுக்கு தெரியவில்லை.

அதாவது விவாதத்திற்கு நேரடி பார்வையாளர்களாக ஒவ்வொரு தரப்பிலும் 150 பேர்கள் வீதம் மொத்தமாக 300 பேர்கள் மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும்.அதற்கு அதிகமாக வருபவர்கள் யாரும் விவாத அரங்கில் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்பது விவாத ஒப்பந்தத்தில் குறிப்பிடபட்டுள்ள விதி.

இதை மீறி இந்த கோ……..வின் வாதத்தைக் கேட்க கூட்டம் அதிகமாக வந்ததாம்.

பொய் சொல்ல ஒரு அளவு வேனாமா?

அன்பின் ஜமாலி அவர்களே பொய் சொல்பவனுக்கு அதிகம் ஞாபக சக்தி வேண்டும் இல்லையேல் உங்கள் கதை தான்.

விவாதத்தில் ஒரு ஆதாரத்தைக் கூட எடுத்துவைக்க திரானியற்ற (கோ)மாலி விவாதம் முடிந்ததும் தவ்ஹீத் ஜமாத் அறிஞா்களும் பெரும்பாலான பார்வையாளா்களும் அரங்கை விட்டு வெளியேறியதும். அங்கும் அந்த கேடு கெட்டவா்கள் மவ்லிதை ஓதினார்கள்.

உடனே இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு தெரியப் படுத்தப்பட்டுதவ்ஹீ்த் ஜமாத் இந்த கேடு கெட்ட வேலையை கண்டித்ததுடன் கலைந்து சென்றது அந்தக் கூட்டம்.


வர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)


இந்தக் கட்டுரையை பார்ப்பவர்கள் முடிந்தால் அந்த ஜமாலிக்கு அனுப்பி வையுங்கள். தைரியம் இருந்தால் இதற்கு பதில் தரட்டும்.

Read more »

0 comments:

Post a Comment

ஆயிஷா மைந்தன்