Saturday 17 July, 2010

இளைஞர்களுக்கு விமானப் படையில்

இளைஞர்களுக்கு விமானப் படையில் வேலைவாய்ப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
விமானப் படையில் ஆட்டோ டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்
ஜூலை 24 முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முகாமில் கலந்து கொள்பவர்கள் காலை 7 மணிக்கு
ஆவடி விமானப்படை நிலையத்துக்கு வந்து சேர வேண்டும்.

1989 ஜூலை 1-ம் தேதி முதல் 1993 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பிறந்த, திருமணமாகாத, ஆண்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2-ல் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படித்து 50 சதவீதம் மதிப்பெண்
பெற்றவர்கள் அல்லது டிப்ளமோ படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச தொழிற் பயிற்சி



சென்னை, ஜூலை 10: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு வேலை வாய்ப்புச் சார்ந்த
இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தேசிய சிறு தொழில் கழகத்தின் சார்பில் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளது.

சிஎன்சி ப்ரோக்ராமிங், ஆட்டோ கேட், எம்எஸ் ஆஃபிஸ் டூல்ஸ், கம்ப்யூட்டர் பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
இதற்கான நேர்முகத் தேர்வு, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தேசிய சிறு தொழில் கழகத்தில் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறும்.18 முதல் 35 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: 044-2225 2335 begin_of_the_skype_highlighting              044-2225 2335      end_of_the_skype_highlighting begin_of_the_skype_highlighting              044-2225 2335      end_of_the_skype_highlighting, 95000 65747
Read more »

0 comments:

Post a Comment

ஆயிஷா மைந்தன்