Tuesday 27 July, 2010

அமித் ஷாவுக்கு மேலும் சிக்கல்


சோராபுதீன் ஷேக் போலி என்கெளன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீஸ் டிஎஸ்பியான என்.கே. அமீன் மற்றும் முன்னாள் ஏடிஜிபி ஜி.சி.ராய்கர் ஆகியோர் அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

இதனால் கைது செய்யப்பட்ட குஜராத் அரசுக்கும், முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

அமீனிடம் அமித் ஷாவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஏராளமான தகவல்கள் உள்ளதால் அவர் சிபிஐக்கு அளிக்கப் போகும் தகவல்கள் குஜராத் அரசுக்கு பெரும் தலைவலியைத் தரலாம் என்று தெரிகிறது.

அதே போல குஜராத் சிஐடி பிரிவின் தலைவராக இருந்தபோது சோராபுதீன் என்கெளண்டர் வழக்கை விசாரித்த முன்னாள் ஏஜிடிபி ராய்கரும் சிபிஐ தரப்பு சாட்சியாகியுள்ளார். ஷேக் மற்றும் அவரது மனைவியின் கொலைகளை மறைக்கவும் பொய்யான அறிக்கை தாக்கல் செய்யவும் அமித் ஷா தனக்கு எப்படியெல்லாம் நெருக்கடி தந்தார் என்ற விவரத்தை சிபிஐயிடம் தர உள்ளார்.

அதிகாரி உயிருக்கு ஆபத்து?:

இந்த விசாரணையை மெதுவாக நடத்துமாறு அமித் ஷா உத்தரவிட்டதால் தான் விசாரணையை ராய்கர் இழுத்தடித்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த இழுத்தடிப்பால் கடுப்பானதால் தான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது நினைவுகூறத்தக்கது.

இதற்கிடையே அமீனின் வழக்கறிஞர் ராஜேஷ் மோடி, சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், அமீனை மன்னித்துவிடுமாறும், பாதுகாப்பு கருதி அவரை வேறு மாநில சிறைக்கு மாற்றுமாறும் கோரப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கடந்த 2007ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட அமீன், இப்போது அமித் ஷா அடைக்கப்பட்டுள்ள சபர்மதி சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனையே பணம் தான்:

ரியல் எஸ்டேட், கிரனைட் தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பது தொடர்பாக அமித் ஷா- அவரது போலீஸ் கூட்டாளிகள் ஆகியோருக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் போலி என்கெளண்டரில் போய் முடிந்துள்ளதாக சிபிஐ கருதுகிறது. இதன் முழுப் பின்னணியை தோண்டி எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில், தொழிலதிபர்களை மிரட்டி அமைச்சர் அமித் ஷா பணம் பறித்து வந்தார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ முன் வைக்கவுள்ளது.

சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ கொலை செய்யப்படுவதற்கு முந்தைய வாரத்தில் 32 முறை டிஎஸ்பி அமீனுடன் அமித் ஷா தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அமீனுக்கு ஷா பிறப்பித்த உத்தரவு விவரங்களை சிபிஐயிடம் அவர் விளக்கிவிட்டதாகத் தெரிகிறது.

மேலும் அமித் ஷா தன்னிடம் பேசியபோது சில அழைப்புகளை அவர் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார். அமீன் வீட்டில் ரெய்ட் நடத்தி இந்த ஆடியோ சிடியையும் சிபிஐ கைப்பற்றிவிட்டது.

தொகாடியாவின் நண்பர்:

எம்பிபிஎஸ் படித்த டாக்டரான அமீன், குஜராத் போலீசில் சேர்ந்தவர் ஆவார். விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு மிக நெருக்கமானவர். இருவரும் எம்பிபிஎஸ் பேட்ச் மேட்கள் ஆவர்.

இந்த போலி என்கெளண்டர் வழக்கில் இதுவரை 14 குஜராத் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முன்னாள் ஐ.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற சிலர் குஜராத் மதக் கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறியவர்கள், கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் மேலும் சிலரும் சிபிஐ-அரசுத் தரப்பு சாட்சிகளாக மாறி பல உண்மைகளை சொல்ல வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

வீடியோவில் சிக்கிய ஷாவின் உதவியாளர்கள்:

அமீன், ராய்கர் தவிர அகமதாபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமன் படேல், தசரத படேல் ஆகியோரை அமீத் ஷாவின் உதவியாளர்கள் பஜ்பல், அஜய் படேல் ஆகியோர் மிரட்டுவதைக் காட்டும் வீடியோ காட்சிகளையும் முக்கிய ஆதாரமாக சிபிஐ முன் வைத்துள்ளது.

சோராபுதீன் உங்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வாக்குமூலம் தர வேண்டும் என்று அமித் ஷா சார்பில் இவர்கள் படேல்களை மிரட்டினர். இதை அவர்கள் ரகசிய கேமராவில் பதிவு செய்து சிபிஐயிடம் தந்துவிட்டனர்.

மொத்தத்தில் அமீத் ஷாவை சுற்றி சிபிஐ மிகக் கச்சிதமாக வலையைப் பின்னிவிட்டது. இதிலிருந்து ஷா தப்பிக்க இயலாது என்று கூறப்படுகிறது.

ஆதாரத்தை அழித்த ஐபிஎஸ் அதிகாரி:

இதற்கிடையே சோராபுதீன் போலி என்கெளண்டர் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் அமித் ஷா பேசிய விவரங்கள் அடங்கிய சிடியில் இருந்த அமித் ஷாவின் பேச்சுக்களை அழித்த மூத்த போலீஸ் அதிகாரி ஓ.பி.மாத்தூரை சிபிஐ கைது செய்யும் என்று தெரிகிறது.

இந்த சிடியை சிபிஐ கோரியபோது அதிலிருந்த ஷாவின் பேச்சுக்களை அழித்துவிட்டுத் தந்தார் மாத்தூர். ஆனால், இன்னொரு அதிகாரியான குஜராத் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி ரஜ்னீஷ் ராய், இந்த முழு உரையாடல்கள் அடங்கிய சிடியை சிபிஐயிடம் தந்து உதவினார். இல்லாவிட்டால் அமித் ஷா எளிதாக தப்பியிருப்பார் என்று சிபிஐ தெரிவித்துள்ளனர்.

யார் சொல்லி உரையாடல்களை மாத்தூர் அழித்தார் என்று அவரிடம் சிபிஐ விசாரி்க்கவுள்ளது. மேலும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

இந்த போலி என்கெளண்டர் விவகாரம் குறித்து குஜராத் சிஐடி போலீசார் விசாரித்தபோது அதன் ஏடிஜிபியாக இருந்தவர் மாத்தூர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமித் ஷாவையும் என்கெளண்டர் நடத்திய போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால், அப்போது சிஐடி பிரிவின் டிஐஜியாக இருந்த ரஜ்னீஷ் ராய், நேர்மையாக செயல்பட்டு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்ததோடு, போலி என்கெளண்டர் நடத்திய ஐபிஎஸ் அதிகாரிகளான வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகியோரை கைதும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் வன்சாராவும் தமிழகத்தைச் சேர்ந்த குஜராத் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பாண்டியனும் அமித் ஷாவுக்கு மிக நெருக்கமான அதிகாரிகள் ஆவர். இப்போது இவர்கள் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களை காப்பாற்ற முயன்ற மாத்தூர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் செய்த உதவிக்கு நன்றிக் கடனாக இப்போது மாநில அரசின் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமித் ஷாவுக்காக ஆஜராகும் ஜேத்மலானி:

இதற்கிடையே அமீத் ஷாவை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்தது. நேற்று இந்த மனு மீது விசாரணை நடந்த போது அமீத் ஷா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகே ஷாவிடம் விசாரிக்க வேண்டும் என்று அவர் வாதாடினார்.

ஆனால், ஜேத்மலானியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. வரும் 28, 29, 30ம் தேதிகளில் ஏதாவது 2 நாட்கள் சிறையி்ல் வைத்தே அமீத் ஷாவிடம் விசாரிக்கலாம் என்று சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் விசாரணை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Read more » 0 comments

Monday 26 July, 2010

15 நாள் நீதிமன்றக் காவல்



சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைதாகி உள்ள குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவரை கைது செய்துள்ளது.

15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தம்மை பிணையில் விடுவிக்கக்கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வருகிற 28 முதல் 30 ஆம் தேதிக்குள் சிபிஐ அதிகாரிகள், சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக்கொள்ளலாம் என்று அகமதாபாத் கூடுதல் தலைமை ஜுடிசிய மாஜிஸ்திரேட் ரவால் இன்று அனுமதி அளித்தார்.

ஷா தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான காவல்துறை முன்னாள் டிஎஸ்பி அமின் அப்ரூவராக மாற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.



சிபிஐயை தவறாக பயன்படுத்தவில்லை-பிரதமர்:

இந் நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,

குஜராத் அமைச்சர் அமீத் ஷா கைது செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிபிஐ தன் கடமையை செய்துள்ளது. சிபிஐயை நாங்கள் தவறாகப் பயன்படுத்தவில்லை.

சோராபுதீன் என்கெளண்டர் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடந்து வந்தது. இது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவேத் தெரியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படிதான் சிபிஐ செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அமைதியாகவும், பயனுள்ள வகையிலும் நடைபெறும் என்று நம்புகிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

எல்லா பிரச்சனைகள் மீதும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
Read more » 0 comments

Tuesday 20 July, 2010

வெட்கமில்லாமல் மீண்டும் வெற்றிக் கோஷமா?


கடந்த 17.18.07.2010 ம் தேதி சென்னையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் மாபெரும் விவாதம் நடைபெற்றது. நாம் அனைவரும் அறிந்ததே.


அந்த விவாதத்தில் நடந்த நிகழ்ச்கிகளை நேற்றைய தினம் நமது இணையத்தளத்தில் தொகுத்து வழங்கியிருந்தோம்.


அல்லாஹ்வையே கிண்டலடித்து நபியின் வார்த்தைகளை நக்கல் செய்து கடைசி வரை ஒரு ஆதாரத்தைக் கூட வைக்க முடியாமல் கடைசியில் தலை கால் புரியாமல் உளரிக் கொட்டியதையும் நாம் தொகுத்து வழங்கியிருந்தோம்.

அத்துடன் மேற்கண்ட விவாதம் இரண்டு இணையத் தளங்களிலும் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது.

களியக்காவிலையில் மூக்குடைபட்ட பின்பும் வெக்கம் கெட்டு எப்படி வெற்றி வெற்றி என்று கூச்சல் போட்டார்களோ அதே கூச்சல் மீண்டும் கேட்க ஆரம்பித்துள்ளது.


இந்த சுன்னத்தே இல்லாத ஜமாத்தைச் சோ்ந்த ஜமாலி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்கு இப்போது மறுப்பைத் தருகிறோம்.

உளரல் இலக்கம் 01.

சென்னையில் 17.07.2010 மற்றும் 18.07.2010 நடைபெற்ற விவாதத்தில் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனிலும்இ ஹதீஸிலும் சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் மற்றய இமாம்களுடைய கருத்துக்களிலும் நேரடியான ஆதாரம் உண்டா என்று மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பி ஜே அவர்களிடம் கேட்ட போது இறைவனுக்கு உருவம் உண்டு என இப்னு குதைபா கூறியுள்ளார் என்பதை பி ஜே அவர்கள் ஆதாரமாக காட்டினார்.


இதன் மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை. ஹதீஸில் ஆதாரம் இல்லை. சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் ஆதாரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.


அதாவது விவாதத்தில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் விவாதத்தை ஆண்லைன் மூலம் பார்த்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியும்.


விவாதம் ஆரம்பித்ததிலிருந்து தனது கருத்துக்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாமல் முழித்துக் கொண்டு உளரிக் கொட்டிய ஜமாலியிடம் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் திருமறைக் குர் ஆனிலிருந்தும் ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரத்தை அடுக்கடுக்காக எடுத்து வைத்துக் கொண்டே இருந்தார்.


இந்த கோமாலி எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் தனக்குக் கிடைத்த புனிதமான சந்தர்பங்களிலெல்லாம் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் கத்திக் கொண்டிருந்தார் (வீடியோவைப் பார்ப்பவர்கள் இதனை தெளிவாக அறிய முடியும்)

விவாதத்தின் இருதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று அறிஞர்கள் யாராவது கூறியுள்ளார்களா? என்று ஜமாலி தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு பதில் கொடுத்த பி.ஜெ அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படைக் கொள்கையை தெளிவு படுத்தினார்.


அதாவது எந்த ஒரு மார்க்க விஷயமாக இருந்தாலும் தவ்ஹீத் ஜெமாத்தைப் பொருத்தவரை அல்லாஹ் சொல்லியிருக்கிறானா? அல்லது அவனுடைய தூதர் சொல்லியிருக்கிறாரா என்றுதான் பார்ப்போமே தவிர அந்த ஸஹாபி சொன்னாரா இந்த இமாம் சொன்னாரா என்றெல்லாம் நாம் பார்ப்பதில்லை அப்படி பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.


அதனால் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று எந்த இமாமோ அல்லது எந்த ஸஹாபியோ சொல்ல வேண்டும் என்று நாங்கள் பார்க்க மாட்டோம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னால் எங்களுக்குப் போதும்.


நீங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதால் இதோ இப்னு குதைபாவின் கருத்தைப் பாருங்கள் என்று அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக இப்னு குதைபா அவர்கள் சொன்ன தகவலை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டினார்.

இந்த கோமாலி சொல்லும் தகவல் பொய் என்பதை விவாத வீடியோவைப் பார்ப்பதின் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும்.


உளரல் இலக்கம் 02.
மேலும் நாங்கள் இப்னு குதைபாவை பின்பற்றக்கூடியவர்கள் என்று வாக்குமூலமும் அளித்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அத்துடன் நாங்கள் இப்னு குதைபாவைப் பின்பற்றக் கூடியவர்கள் என்று பி.ஜெ அவர்களே வாக்குமூலம் கொடுத்ததாகவும் இந்த அரைகுறை (ஜமாலி) எழுதியுள்ளது.


இந்த கோமாலி சொல்லும் தகவல் பொய் என்பதை விவாத வீடியோவைப் பார்ப்பதின் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும்.

உளரல் இலக்கம் 03.

17.07.2010
சனி அன்று நடந்த விவாதத்தில் மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் எடுத்து வைத்த கருத்துக்களும் வாதங்களும் வஹ்ஹாபிகளுக்கு மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்செய்தி சென்னை முழுவதும் பரவியதால் விவாதத்தின் முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையில் வருகைதந்த வஹ்ஹாபிகள் மௌலவி ஆ.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஆ.யு அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாதத்தின் இரண்டாம் நாளான 18.07.2010 ஞாயறு அன்று அதிக எண்ணிக்கையில் வந்தனர்.

உண்மையில் இவர் பெயர் ஜமாலி அல்ல கோமாலி தான்.


ஏன் எனில் இவரின் இந்த வாதத்தைக் பாருங்கள். இந்த கோமாலி கூறிய கருத்துக்கள் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியதாம்…………….

அதனால் விவாதத்தின் முதல் நாள் வந்த கூட்டத்தை விட அதிகமாக தவ்ஹீத் சகோதரர்கள் அரங்கத்திற்கு வருகை தந்தார்களாம்.


ஞாயிற்றுக் கிழமை நடந்த விவாதத்தை ஆன்லைனில் பார்த்தவர்கள் உண்மையைப் புரிந்திருப்பார்கள்.


சகோதரர் பி.ஜெ அவர்கள் பேசும் போதே உங்கள் வாதத்தின் லெச்சனம் தான் நெற்று உங்கள் தரப்பில் வந்த கூட்டத்தில் பாதிப்பேரை இன்று காணம்.என்று செருப்பால் அடித்ததைப் போல் உண்மை நிலையைப் போட்டு உடைத்தார்.


அதற்கு பதில் கூறிய அறிஞர்(?) கோமாலி சாஹிப் அவர்கள். தமது தரப்பு ஏன் வரவில்லை என்பதை மறந்து விட்டு எனது வாதத்திறமையைப் பார்பதற்க்காகத்தான் உங்கள் தரப்பில் மக்கள் கூட்டம் குறையாமல் வந்திருக்கிறது.என்று ஜொல்லு வடியக் கூறினார் அதைக் கேட்ட அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. (ஜமாலின்ணே என்னென்னே கேவலத்திற்கு அளவு வேனாமா?)


அடுத்துப் பேசிய பி.ஜெ அங்கிருந்த தவ்ஹீத் சகோதரர்களிடம் நீங்கள் இவரின் வாதத்திரமையைப் பார்க்கத்தான் வந்தீர்களோ என்று கேட்க இல்லவே இல்லை என்று அரங்கம் அதிரும் அளவுக்கு சப்தம் கேட்டது.


அத்துடன் இவரின் கருத்துக்களைக் கேட்க சனிக்கிழமை வந்ததை விட அதிக எண்ணிக்கையில் தவ்ஹீத் சகோதரர்கள் வந்ததாக கூறுகிறாறே விவாதத்தின் ஒப்பந்தம் என்ன என்பதே இந்த கோ……… வுக்கு தெரியவில்லை.


அதாவது விவாதத்திற்கு நேரடி பார்வையாளர்களாக ஒவ்வொரு தரப்பிலும் 150 பேர்கள் வீதம் மொத்தமாக 300 பேர்கள் மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும்.அதற்கு அதிகமாக வருபவர்கள் யாரும் விவாத அரங்கில் அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்பது விவாத ஒப்பந்தத்தில் குறிப்பிடபட்டுள்ள விதி.


இதை மீறி இந்த கோ……..வின் வாதத்தைக் கேட்க கூட்டம் அதிகமாக வந்ததாம்.


பொய் சொல்ல ஒரு அளவு வேனாமா?


அன்பின் ஜமாலி அவர்களே பொய் சொல்பவனுக்கு அதிகம் ஞாபக சக்தி வேண்டும் இல்லையேல் உங்கள் கதை தான்.

விவாதத்தில் ஒரு ஆதாரத்தைக் கூட எடுத்துவைக்க திரானியற்ற (கோ)மாலி விவாதம் முடிந்ததும் தவ்ஹீத் ஜமாத் அறிஞா்களும் பெரும்பாலான பார்வையாளா்களும் அரங்கை விட்டு வெளியேறியதும். அங்கும் அந்த கேடு கெட்டவா்கள் மவ்லிதை ஓதினார்கள்.

உடனே இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு தெரியப் படுத்தப்பட்டு தவ்ஹீ்த் ஜமாத் இந்த கேடு கெட்ட வேலையை கண்டித்ததுடன் கலைந்து சென்றது அந்தக் கூட்டம்.


வர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)

இந்தக் கட்டுரையை பார்ப்பவர்கள் முடிந்தால் அந்த ஜமாலிக்கு அனுப்பி வையுங்கள். தைரியம் இருந்தால் இதற்கு பதில் தரட்டும்.

Read more » 0 comments

ஆயிஷா மைந்தன்